உயிர் கலை !!!!!!!! .......எனும் ....சாகாகலை....

உயிர்தான் உணர்ச்சி எனும் உடலாக வடிவம் எடுத்து நிற்கிறது.உயிரும் உடலும் பேதா அபேதம் அற்ற ஒரே பொருளாக உள்ளது.இதுவே உண்மை.
தாயின் மடியில் புகுந்த உயிர்தான் அந்த சரீரத்தை செய்துகொண்டு வந்தது. ச்சேரீரத்தை தன் விருப்பப்படியே செய்துகொள்ளும் குணம் உயிருக்கு உண்டு.உயிரின் எண்ணமே சரீரமாக வடிவெடுக்கிறது.மனம் விரிந்து சரீரமாக மாற்றம் அடைகிறது.
கருவறையில் தனது சரீரத்தையே உயிராக பாவித்து வந்த சிசுவிற்கு கருவறையே அதன் உலகம்.கருவறையில் தான் எண்ணியதை எண்ணியவாறு முடித்திட்ட உயிர் அதுவாகவே வெளியேறுகிறது.
கருப்பையை விட்டு உடலோடு கூடிய உயிர்தான் வெளியேறி சிசுவாக ஜனிக்கிறது. அதுவரை உடல்தான் உயிர் என பழகி வந்த அந்த சிசுவுக்கு உலகில் தாய் தந்தை நட்பு சொந்தம் பந்தம் என அதன் உலகம் விரியும் பொது அது, தான் உயிர் என்ற கவனம் விட்டு உலகமே தான் என அனுமானித்து தன் கவனத்தில் உள்ள சரீரத்தை மறந்துபோகிறான்.
அப்போது தான் அவனுக்கு பயம் எனும் உணர்வு தோன்றுகிறது. எண்ணத்தால் உண்டான சரீரம் எண்ணம் கேட்டு போகும் பொது செத்துபோகிறது.
என்றாவது ஒரு நாள் இந்த சரீரம் தன்னிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இருந்த உயிர் சலிப்பு அடைந்து விட்டு இனியும் இந்த சரீரம் உதவாது எனும் கட்டத்தில் அதை தன் கவனத்தில் இருந்து விடுவிக்கிறது அதுவே மரணம். உயிரை நாம் கவனிக்க உயிர் நம் சரீரத்தை கவனிக்கும் . இதுவே சாகாகலை எனும் உயிர்கலை.
கவனம் மட்டும்தான் உயிர். கவனம் எங்குண்டோ உயிர் அங்குண்டு. கவனமும் உணர்ச்சியும் பொருந்தவேண்டும்.
என்றாவது ஒரு நாள் இந்த சரீரம் தன்னிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இருந்த உயிர் சலிப்பு அடைந்து விட்டு இனியும் இந்த சரீரம் உதவாது எனும் கட்டத்தில் அதை தன் கவனத்தில் இருந்து விடுவிக்கிறது அதுவே மரணம். உயிரை நாம் கவனிக்க உயிர் நம் சரீரத்தை கவனிக்கும் . இதுவே சாகாகலை எனும் உயிர்கலை.
கவனம் மட்டும்தான் உயிர். கவனம் எங்குண்டோ உயிர் அங்குண்டு. கவனமும் உணர்ச்சியும் பொருந்தவேண்டும்.
மேலும் பல கட்டுரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள இணையதள இணைப்பு பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்.....
No comments:
Post a Comment