Sunday, 24 November 2019

தினமும் சிறுகீரை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?



தினமும் சிறுகீரை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?


மனிதர்களாகிய நமக்கு மாறிவரும் கால, சுற்று புற சூழ்நிலைகளாலும் பல விதமான நோய்கள் நம்மை தாக்குகிறது. இத்தகைய நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் அப்படி சத்து நிறைந்த உணவு வகைகளாக கீரைகள் இருக்கின்றன. இதில் சிறுகீரை பயன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.



சிறுகீரை பயன்கள்

மலச்சிக்கல் 

நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைககளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறுகீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.

கல்லீரல்

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

ஊட்டச்சத்து

வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறுகீரையில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிறுகீரை சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம்.

செரிமானமின்மை 

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை சிறுகீரை அற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், குடல் சுத்திகரிப்பானாகவும் சிறுகீரை சிறப்பாக செயல்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது சிறுகீரை ஆகும்.

இரத்தசோகை 

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். சிறுகீரையை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

ஆண்மை குறைபாடு 

இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. சிறுகீரை ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

கண்கள் 

முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள். இந்த கண்களை கொண்டு தான் நாம் அனைத்தையுமே காண்கிறோம். எனவே கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். சிறுகீரையில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

புண்கள் 

உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை சிறுகீரை கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்ப்பதுடன் காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது சிறுகீரை.

நோய் எதிர்ப்பு 

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.

Image result for sirukeerai images

தேவையான பொருட்கள்

சிறு கீரை - 1 கொத்து [இலைகளை கழுவி பறிக்கவும் பின்னர் நறுக்கவும்]
வெங்காயம் - 1 [வெட்டப்பட்டது]
பச்சை மிளகாய் - 1 [பிளவு]
கறிவேப்பிலை - 1 வசந்தம்
தேங்காய் - ¼ கப் [அரைத்த]
சிவப்பு மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - ½ டீஸ்பூன்
கடுகு விதைகள் - 1 டீஸ்பூன்
வங்காள கிராம் - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு  - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சுவைக்க உப்பு
தேவைக்கேற்ப தண்ணீர்



தயாரிப்பு

எண்ணெயுடன் பான் சூடாக்கி கடுகு சேர்க்கவும். அது பிரிந்தவுடன் வங்காளம் கிராம் & உளுத்தம்பருப்பை  சேர்க்கவும்.
மென்மையான வரை வெங்காயத்தை  வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்  மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய சிரு கீரை, மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், 2 நிமிடம் வதக்கவும், பின்னர் சிறிதளவு  தண்ணீர் விட்டு  கொதிக்க வைக்கவும்.
கொத்தமல்லி தூள், உப்பு, தேங்காய் கலவை நன்றாக சேர்க்கவும். 1 நிமிடம் விடவும். பின்னர் வெப்பத்தை துண்டிக்கவும்.
அரிசியுடன் சூடாக பரிமாறவும்.

Saturday, 23 November 2019

அரைக்கீரை பொரியல்

பொதுவாக கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும், பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும். அதிலும் அரைக்கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சூப்பராக இருக்கும்.
இங்கு அரைக்கீரை பொரியலை சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்களேன்...
Image result for arai keerai poriyal in tamil
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை - 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
துருவிய தேங்காய் - 1/4 கப்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் கீரையை போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து கீரையை வேக வைக்க வேண்டும்.
கீரையானது நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பின், அதில் தேங்காயை சேர்த்து கிளறி, சீரகப் பொடி மற்றும் பூண்டை தட்டி போட்டு கிளறி இறக்கினால், அரைக்கீரை பொரியல் ரெடி!!!

Saturday, 21 September 2019

அகந்தை என்பது என்ன?


Related image
அகந்தை என்பது என்ன?

வெளி உலகத்தில் இருக்கும் எல்லா பொருள்களையும் உயிர்தான் பார்க்கிறது.
உயிருக்கு உதவி செய்யும் கருவிகள்தான் மனமும், புலனும், பொறிகளும் ஆகும்.
இந்த கருவிகளையே உயிராக எண்ணுவதுதான் அகந்தையாகும்.
அகம் என்ற அறிவு சிதைந்துபோன தந்தையான ஒரு நிலையைத்தான்.
இந்த அகந்தைதான் ஆணவம் ஆகும்.
ஆணவம் என்பது உண்மையான  உயிரை அதாவது ஆன்மாவை மனமாகவும், புலன்களாகவும் தோன்றும்படி செய்வது.
ஆன்மாதான்  உண்மையான எல்லாவற்றையும் பார்ப்பது. இதுதான் இயற்கையான உண்மை ஆன்மாவாகும்.
மனதையும், புலன்களையும், பொறிகளை ஆன்மா என்று எண்ணுவது செயற்கையான ஆன்மாவாகும். இது வெறும் கற்பனை.
அறியாமையிலிருந்து விடுபடும் வரையில் ஆணவம்தான் ஆன்மாவாக நடிக்கிறது. அதை நாமும் உண்மை என்று எண்ணி தவறு செய்து கொண்டிருக்கிறோம்.
நான் என்ற உணர்வு இரண்டு வகையில் தோன்றுகிறது.
முதல் வகையான நான் என்பதுதான் ஆன்மாவாகிய உயிரை குறிப்பது.
மற்றது கற்பனையாக சொல்லும் நான் என்பது.இதிலிருந்து விடுதலை பெறுவதுதான், ஆணவத்தில் இருந்து நாம் விடுதலை பெறுவதாகும்.

ஆணவத்தில் இருந்து விடுதலை பெற்றால்தான் நாம் உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ள முடிகிறது.
ஆணவத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்படி?
             யோகா சாத்திரத்தின் முழு நோக்கமும் ஆணவத்திலிருந்து நம்மை விடுவிப்பதுதான்.
             அப்படி ஆணவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கு யோகா பயிற்சி எப்படி உதவுகிறது?
             இதை ஒரு எழுத்தை மற்றொரு எழுத்தாக எப்படி மாற்றுவது என்பதை  தெரிந்துகொள்வதன் மூலமாக உணர்ந்து கொள்ளலாம்.
              'க', 'க்', என்ற இரண்டு எழுத்துக்கும் மேலெழுந்த வாரியாக பார்த்தால் ஓரே மாதிரியாகத்தான் தோன்றுகின்றன.
                சற்று கூர்ந்து பார்த்தால் அவற்றில் ஒரு எழுத்தின்மீது ஒரு புள்ளி இருப்பதை பார்க்கலாம்.
                அந்த புள்ளி என்ன செய்கிறது? ஒரு மாத்திரை ஒலி அளவுடைய  'க' என்ற எழுத்தின் மீது புள்ளியை வைத்தால், அது, அரை மாத்திரை ஒலி அளவுடன் கூடிய 'க்' என்ற எழுத்தாக மாறிவிடுகிறது.
                'க்' என்ற எழுத்தின் மீது இருக்கும் புள்ளியை எடுத்து விட்டால் அதுவே ஒரு மாத்திரை ஒலி அளவை உடைய 'க' என்ற எழுத்தாக மாறிவிடுகிறது.
                  இதைப்போலவே நான் என்ற சொல் உயிரையே குறிப்பிடவேண்டும். அப்படி குறிப்பிடாமல் புலன் பொறிகளை மனதையும் குறிப்பிட நேர்வது எப்படி?
                  உயிர் அதாவது ஆன்மா வேறு. ஆன்மா பயன்படுத்தும் கருவிகள் வேறு என்பதை தவறாக புரிந்து கொள்வதால்தான் இந்த வேறுபாடு ஏற்படுகிறது.
                  இந்த தவற்றைத்தான் அறியாமை என்றும், ஆணவம் என்றும் சொல்கிறோம்.
                  அறியாமையையும், ஆணவத்தையும் நீக்குவதற்கு புலன் பொறி என்ற செயற்கை புள்ளியை நீக்கிவிட வேண்டும்.
                 இதற்கு யோகா பயிற்சியில் பல படிகளை அமைத்திருக்கிறார்கள்.
                  அதில் ஏழாவது படியாகிய தியானத்தில் வெற்றி பெற்றவுடன் செயற்கையான ஆணவம் போய்விடுகிறது. இயற்கை உண்மையான  சமாதி நிலை கூடுகிறது.
                 இப்போது உயிராகிய ஆன்மாவை, ஆன்மாகவே அறிந்து கொள்கிறோம்.
                 இதைதான், "கரணம் எலாம் கரைந்த தனிக்கரை காண்பது உளரோ? கரைகண்டபொழுது எனையும் கண்டு தெளிவேனோ?" என்று தம் ஞானயோக அனுபவத்தை பற்றி சொல்கிறார் திருஅருட்ப்ரகாச வள்ளலார். 



Wednesday, 10 October 2018

மனித பிறவியின் நோக்கமே முக்தி தான் ,,,

மனித பிறவியின் நோக்கமே முக்தி தான் ,,,


Image result for aanmeegam pic


மனித பிறவியின் நோக்கமே முக்தி தான் ,,,
அதற்கான வழியினை ஞான மார்க்கமாக தேடாமல், வேதாந்தம் சித்தாந்தம் எல்லாம் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொண்டும் பிரமாண்டமான கோவில்களை கட்டி வைத்து என்ன பலன்,,
உயிரே கடவுள் என்பதே அகம் பிரம்மாஸ்மி என்பதை புரியாது எப்படி முக்தி அடைய முடியும்.... பிரமாண்டத்தை தேடாதே உன்னுள்ளே உனக்கு சொந்தமான உன் கடவுளை உன்னுள் தேடுதலே முக்தி மார்க்கம்.
உன் கடவுளை உன்னுள் உணர்த்துபவனே குரு..

உயிர் கலை !!!!!!!! .......எனும் ....சாகாகலை....

உயிர் கலை !!!!!!!! .......எனும் ....சாகாகலை....

Image may contain: text

உயிர்தான் உணர்ச்சி எனும் உடலாக வடிவம் எடுத்து நிற்கிறது.உயிரும் உடலும் பேதா அபேதம் அற்ற ஒரே பொருளாக உள்ளது.இதுவே உண்மை.
தாயின் மடியில் புகுந்த உயிர்தான் அந்த சரீரத்தை செய்துகொண்டு வந்தது. ச்சேரீரத்தை தன் விருப்பப்படியே செய்துகொள்ளும் குணம் உயிருக்கு உண்டு.உயிரின் எண்ணமே சரீரமாக வடிவெடுக்கிறது.மனம் விரிந்து சரீரமாக மாற்றம் அடைகிறது.
கருவறையில் தனது சரீரத்தையே உயிராக பாவித்து வந்த சிசுவிற்கு கருவறையே அதன் உலகம்.கருவறையில் தான் எண்ணியதை எண்ணியவாறு முடித்திட்ட உயிர் அதுவாகவே வெளியேறுகிறது.
கருப்பையை விட்டு உடலோடு கூடிய உயிர்தான் வெளியேறி சிசுவாக ஜனிக்கிறது. அதுவரை உடல்தான் உயிர் என பழகி வந்த அந்த சிசுவுக்கு உலகில் தாய் தந்தை நட்பு சொந்தம் பந்தம் என அதன் உலகம் விரியும் பொது அது, தான் உயிர் என்ற கவனம் விட்டு உலகமே தான் என அனுமானித்து தன் கவனத்தில் உள்ள சரீரத்தை மறந்துபோகிறான்.
அப்போது தான் அவனுக்கு பயம் எனும் உணர்வு தோன்றுகிறது. எண்ணத்தால் உண்டான சரீரம் எண்ணம் கேட்டு போகும் பொது செத்துபோகிறது.
என்றாவது ஒரு நாள் இந்த சரீரம் தன்னிடம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இருந்த உயிர் சலிப்பு அடைந்து விட்டு இனியும் இந்த சரீரம் உதவாது எனும் கட்டத்தில் அதை தன் கவனத்தில் இருந்து விடுவிக்கிறது அதுவே மரணம். உயிரை நாம் கவனிக்க உயிர் நம் சரீரத்தை கவனிக்கும் . இதுவே சாகாகலை எனும் உயிர்கலை.
கவனம் மட்டும்தான் உயிர். கவனம் எங்குண்டோ உயிர் அங்குண்டு. கவனமும் உணர்ச்சியும் பொருந்தவேண்டும்.
மேலும் பல கட்டுரை தொடர்ந்து படிக்க கீழே உள்ள இணையதள இணைப்பு பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்.....

உடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்

உடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்

Image result for human body anatomy

உயிருடன் வாழும் காலத்தே, உயிருடன் கலந்து ஜனிக்க தெரியாத வாழா வெட்டிகளுக்கு, மரணம் என்பது இயல்பான ஒன்று தான். முக்தி என்பது, உயிரை உணராத வரை சாத்தியம் அன்று.
நம் சரீரம் என்பது ஏதோ எலும்பும் சதையும் கொண்ட சாதாரண அழியக் கூடிய உடல் அன்று. அது பல அதிசயங்களை கொண்ட பொக்கிஷம். இங்கிருந்தே பல அதிசயங்கள் நிகழ்கின்றன. மரணத்தை வென்று சித்தர் பலர் ஒளி தேகமாக முக்தி அடைந்துள்ளனர். ..
வசிஷ்டரையும் விசுவாமித்ரரையும் விரோதிகளாக்கிய கல்ப தருவும் காமதேனுவும் நம் சரீரத்துலே அமைந்து இருப்பதை மெய் ஞான மார்கமாக ஆராய்ந்து உண்மையின உணரன்கள்.
நம் சரீரத்தின் நவ துவாரங்கள் நவ கிரகங்கள் தான்…
வலது கண் சூரியன்,
இடது கண் சந்திரன்,
வலது நாசி செவ்வாய்,
இடது நாசி புதன்,
வலது காது குரு,
இடது காது சுக்கிரன்…
செவ்விய வாயுள்ளே நாக்கு சனி, அதாவது செந்நிற வலயம் கொண்ட கிரகம்,
வானவர் தேசத்தாருக்கும் புவியை விட்டு சென்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் உயிரே கடவுள்..காலன் எனும் எமன் வணங்கும் தெய்வம் உயிர் தான்..உயிரை வணங்க காலனுக்கும் கிரகங்களுக்கும் நட்பானேன்..உயிர் கவனம் கொண்டு சரீர கவனம் விடுத்து உயிராகிப் போகும் அற்ப்புதமான சாகாக்கலையே சம்மதம் உயிர்க்கலை…..
ஆதியில் வேல் வடிவாக வந்த உயிரணுவே தலையோடு கூடிய தண்டு வடம் அதுவே உயிருடல் எனும் கேது….ஞான உடல் அது படைத்ததே ராகு எனும் உலக உடல்..ஆறாக விரிந்ததை தாமரை மொட்டு போல் வேல் ரூபமாக்கி தலையோடு கூடிய உயிருடலை தியானிக்க ஊன் உடல் உயிருடலாக மாறும் அதிசயம் தான் உயிர்க்கலை..
எளிதாக முக்திக்கு வழி செய்யும் சம்மதம் மட்டுமே இனி உலகில் விளங்கும் இது எம் அய்யன் போகரின் வாக்கு…..
சுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்

Thursday, 9 August 2018

தொப்பை குறைய - to burn belly fat

தொப்பை குறைய - to burn belly fat


என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்க...


பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும்.

சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும்.

மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா!!!


க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.




பீன்ஸ் 
பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.




ஆப்பிள் 
ஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.




அவகேடோ
 உடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள தொப்பையைக் குறைக்கலாம்.




வேர்க்கடலை 
வெண்ணெய் பொதுவாக நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் சொல்கின்றனர். இதற்கு காரணம், அத்தகைய நட்ஸில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.





சமையல் எண்ணெய்கள் 
ஆரோக்கிய எண்ணெய்களான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களான எள், வால்நட் போன்றவற்றை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆரோக்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.




காய்கறிகள் 
காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிட கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைந்து விடும்.




டார்க் சாக்லெட் 
ஆம், டார்க் சாக்லெட்டில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்களும், அதிக அளவில் கொக்கோவும் உள்ளால், நிச்சயம் இதனை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.




ஓட்ஸ்
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.




பூண்டு
நறுமணப் பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.




முட்டை 
ஒரு நாளை நல்ல தினமாக ஆரம்பிப்பதற்கு ஏழு கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.




செலரி 
கொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், இது ஒரு உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.




இஞ்சி 
இஞ்சியை சாப்பிடாமல் இருப்பதை விட, சாப்பிட்டப் பின் அவை இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இத்தகைய சக்தி நிறைந்த இஞ்சியை, டீ-யிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சாப்பிடுவது நல்லது.




பெர்ரிப் பழங்கள் 
பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.




பட்டை 
மசாலாப் பொருட்களில் ஒன்றான் பட்டையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவையும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், உடல் தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராமல் தடுக்கப்படும்.




பேரிக்காய் 
பேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்ற சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள், பழங்களில் பேரிக்காயையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.




குளிர்ந்த நீர் 
தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.




தினை 
தானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.




சர்க்கரைவள்ளி கிழங்கு 
சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்.




சிவப்பு மிளகாய் 
நிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.