Sunday, 22 July 2018

பதஞ்சலி யோக சூத்திரம்

Image result for patanjali MUNIVAR


பதஞ்சலி யோக சூத்திரம்




பதஞ்சலி மகரிஷி மகாவிஷ்ணுவின் இருக்கையான ஆதிசேஷரின் அவதாரமாகக் கருதப் படுகிறார்.  அவர் யோக சூத்திரங்களையும், மகாபாஷ்யம் என்ற இலக்கண விளக்க நூலையும், ஓர் ஆயுர்வேத மருத்துவ நூலையும் எழுதியதாகக் கூறப்படுகிறது. அவரது சமாதி இராமேஸ்வரத்தில் இருப்பதாக ஒரு சாரரும் திருச்சியில் இருப்பதாக ஒரு சாரரும் கூறுகின்றனர். ‘பதஞ்சலி வியாக்ரமர் என்வழி யாமே’ என்று திருமூலர் இவர் பற்றி சொல்லியிருப்பதனால் இவர் திருமூலரின் சீடர் என்பது தெரிய வருகிறது.

சிவபெருமானின் நடனத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் உடல் எடை சுமக்க முடியாத அளவு சட்டென்று கூடிவிட்டதைக் கண்டு, ஆதிசேஷன் இது எப்படி என்று வியந்தார். ‘யோகப்பயிற்சி செய்யும் சிவபெருமானின் உடலில் சக்தி நிலை கூடியிருப்பதால் அதைப்பார்க்கும் எனக்கும் உடலில் சக்தி நிலை கூடிவிட்டது, அதனால் உடல் எடை அதிகரித்து விட்டது’ என்று மகாவிஷ்ணு பதில் தந்தார்.  யோகப்பயிற்சி செய்பவனைப் பார்ப்பவனுக்கே இவ்வளவு நல்ல பலன் கிடைக்குமென்றால், செய்பவனுக்கு எவ்வளவு நல்ல பலன் கிடைக்குமென்று ஆதிசேஷன் யோசித்தார்.  இக்கலையைப் பயின்று பிறருக்கும் போதிப்பதற்காகவே பதஞ்சலியாக அவர் மண்ணில் அவதரித்தார் என்று ஒரு கதை கூறப்படுகிறது.

இவ்வளவு உயர்ந்த, அரிய யோகக்கலையை பதஞ்சலி 196 சூத்திரங்களாக வடித்தார். சூத்திரம் என்பது குறள் போன்ற ஒரு குறுகிய வடிவம்.

இந்த சிறிய வடிவத்தில் மிகச்சில வார்த்தைகளில் அவர் மிகப்பெரிய இரகசியங்களை மிக எளிதாகக் கூறியிருக்கிறார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த சூத்திரங்களுக்கான விளக்க உரைகள்தான் இதுவரை வெளிவந்திருக்கின்றனவே தவிர, தமிழில் சூத்திர வடிவில் வெளிவரவில்லை. முதன்முறையாக சூத்திரவடிவில் எழுது என்று என்னை பதஞ்சலிதான் தூண்டியிருப்பார் என்று கருதுகிறேன்.

பதஞ்சலி யோக சூத்திரங்களைக் கற்பதனால் என்ன பயன்?

பதஞ்சலி யோக சூத்திரங்களைக் கற்பதனால்:

1.   நம் மனதை நாம் அறியலாம்

2.   நம் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறலாம்

3.   உடல் நோய்களை வரவிடாமல் தடுக்கலாம், வந்தாலும் குணப்படுதிக் கொள்ளலாம்

4.   குடும்ப உறவுகளை, மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளலாம்

5.   கைவல்யம் என்ற முக்தி நிலையை அடையலாம்

பதஞ்சலி யோக சூத்திரங்களைக் கற்பதனால் கிடைக்கும் பலன்களைக் கூறிக்கொண்டே போகலாம். முக்கியமானவற்றை மட்டும் மேலே கண்டோம்.

இவ்வளவு பலன்களைத் தரும் பதஞ்சலி யோக சூத்திரங்களைக் கற்றுக் கொள்வோமா? 

No comments:

Post a Comment